நத்தம் அருகே டி.வி. மெக்கானிக் அரிவாளால் வெட்டி கொலை கொலை செய்த உதயக்குமாரை கிராம மக்கள் தாக்கியதில் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா டி.வி மெக்கானிக்யாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று ஊரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை சாரமாரியாக தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்த கிராம மக்கள் உதயகுமாரை பிடித்து சராமரியாக தாக்கியதில் கொலை செய்த உதயக்குமார் பலத்த காயத்துடன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் பட்டப்பகலில் டி.வி. மெக்கானிக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெட்டிகொலை செய்து இறந்து போன உதயகுமார் மீது நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.