ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை உடல்நலக்குறைவால் திடீர் காலமானார். இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
அரசியலில் மூத்த தலைவராக இருந்த ஈவிகேஎஸ், போன வருடம் தனது மகன் திருமகன் ஈவெரா இறப்பை சந்தித்தார். கிழக்கு தொகுதியில் அவர் எம்எல்ஏவாக இருந்த போதே இறந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
அதில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: ஒரு ஆண்டுக்குள் பெரியார் வீட்டில் அடுத்தடுத்து சோகம்.. சிவாஜி முதல் ஸ்டாலின் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த பாதை!
இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜய், வேட்பாளரை களமிறக்கி பலத்தை நிரூப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணிக்கே மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும். ஈவிகேஎஸ் மகன் திருமகன் மறைவு, ஈவிகேஎஸ் மறைவு என அடுத்தடுத்து சோகத்தால் அனுதாப ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் போட்டியிடாது என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.