அரியலூரில் தவெக பெண் நிர்வாகி விலகியதற்கு திமுக, விசிக நிர்வாகிகளான அப்பெண்ணின் உறவினர்களே காரணம் என வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கார்குடி காலனி தெருவில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தில் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என பிரியதர்ஷினி கூறியுள்ள்ளார்.
இதனையடுத்து, இதனை காரணமாக வைத்து, பிரியதர்ஷினி உள்பட 10க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவெகவில் இருந்து கூண்டோடு விலகி உள்ளனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் ஏற்றப்பட்டு இருந்த தவெக கொடியை இறக்கினர். இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், “கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தலைவர் விஜய் கூறி இருக்கிறார். ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, அவர்களே கட்சியில் அனைத்துப் பணிகளையும் செய்ததைப் போல் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளோம்” என செய்தியாளர்களிடம் பிரியதர்ஷினி கூறினார்.
இந்த நிலையில், தவெகவில் நிர்வாகியாக செயல்பட்டு வந்த பிரியதர்ஷினியின் இரண்டு சகோதரர்கள் திமுக மற்றும் விசிகவில் உள்ளதாகவும், எனவே, அவர்களின் வற்புறுத்தலின் பேரிலே, கொடி இறக்கப்பட்டதாகவும் புதுமையான விளக்கத்துடன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கைதிகளை காண வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்.. செருப்பால் அடித்த பெண்கள்!.
மேலும், சினிமாவில் விஜய்யின் வரவு – செலவு கணக்குகளை கவனித்து வந்த வெங்கட் என்ற வெங்கட்ராமன், தவெகவின் பொருளாளராக உள்ளார். ஆனால், இது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்துக்குப் பிடிக்கவில்லை என்றும், இதனால் தமிழகம் முழுவதும் இரு கோஷ்டிகள் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.