செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
தனியார் கடை திறப்பு விழாவை முடித்த பிறகு, கடையை சுற்றி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள், காத்திருந்தபோது மேடைக்கு சென்று பேட்டி தருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடைக்கு சென்று காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த பவுன்சர்களின் உதவியுடன், பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்து கடையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி காரில் ஏறி 30 நொடிக்குள் சிட்டாக பறந்து சென்றார்.
இதையும் படியுங்க: 50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!
கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் வருகையை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக காத்திருந்த நிர்வாகிகளும் ஏமாற்றும் அடைந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டி கொடுக்க பயந்து ஓடிய சம்பவம் தவெக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.