செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
தனியார் கடை திறப்பு விழாவை முடித்த பிறகு, கடையை சுற்றி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள், காத்திருந்தபோது மேடைக்கு சென்று பேட்டி தருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடைக்கு சென்று காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த பவுன்சர்களின் உதவியுடன், பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்து கடையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி காரில் ஏறி 30 நொடிக்குள் சிட்டாக பறந்து சென்றார்.
இதையும் படியுங்க: 50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!
கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் வருகையை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக காத்திருந்த நிர்வாகிகளும் ஏமாற்றும் அடைந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டி கொடுக்க பயந்து ஓடிய சம்பவம் தவெக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
This website uses cookies.