நடிகர் விஜய் கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் மதுரை வந்தடைந்தார்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகிறார். அவருக்கு எப்போது ரஜினியிடம் இருந்து அழைப்பு வரும் என்ற கேள்விக்கு.? அது போன்று செய்யக்கூடாது அது தவறு என்றும். மேலும், ரஜினியை சாமியாக நினைத்து பூஜித்தாள் சாமியே அவருக்கு நல்லது செய்யட்டும் என்றார்.
இதையும் படியுங்க: ராணுவ வீரர்களுக்கான தேர்வை எழுத வந்த வடமாநில இளைஞர்களுக்குள் அடிதடி.. போலீசார் நடத்திய தடியடி!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியுள்ளார் என்ற கேள்விக்கு.? வரட்டும் வரட்டும் கமலஹாசன் முயற்சி பண்ணது மாதிரி விஜய்யும் முயற்சி பண்ணட்டும். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது கட்சி தொடங்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார்.
ஆனால், கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார் முயற்சி செய்யட்டும் தாமும் அரசியலுக்கு வர வேண்டுமென மனதில் நினைத்து ஆசைப்பட்டிருக்கிறார். வந்து பிறகு என்ன செய்வார் என்று தெரியவில்லை தமிழ்நாட்டில் இப்போது முடியாது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று செய்தியாளர் கேள்விக்கு.? அது முடியாது என்றார். விஜய் முயற்சி பண்ணட்டும். ஆனால் ஜெயிக்க முடியாது. மிகவும் கஷ்டம் என்றார்.
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.