சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
சென்னை: சென்னை அடுத்த எண்ணூரில், கடந்த 2017ஆம் ஆண்டு தனது முழு ஆயுட்காலத்தை எட்டியதால் 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில், இந்த எண்ணூர் அனல் மின் நிலையத்தை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்னெடுத்து உள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச.20) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும், அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, சீமான், “வேலைவாய்ப்பு, ஊதியம் தான் முக்கியம் எனக் கூறி, அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், உங்கள் வீட்டை அதன் அருகில் கட்டிக் கொள்ளுங்கள். இது நடக்காது, நடக்காது, நடக்காது. நான் உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
அதேபோல், “வட சென்னைக்கு உட்பட்ட எண்ணூர் பகுதியில் 660 மெகா திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், மீனவர்கள் பாதுகாக்கப்படவும் கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என வடசென்னை தவெக இளைஞர் அணித் தலைவர் எம்.எல்.பிரபு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. ஓசூரில் சோகம்!
இதனிடையே, தமிழ்நாடு மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உதவும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.