தமிழகம்

முதல்முறையாக களத்தில் எதிர்ப்பு குரல் தெரிவித்த தவெக.. தமிழக அரசு உத்தரவாதம்!

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சென்னை: சென்னை அடுத்த எண்ணூரில், கடந்த 2017ஆம் ஆண்டு தனது முழு ஆயுட்காலத்தை எட்டியதால் 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில், இந்த எண்ணூர் அனல் மின் நிலையத்தை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்னெடுத்து உள்ளது.

இந்த நிலையில், இன்று (டிச.20) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும், அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, சீமான், “வேலைவாய்ப்பு, ஊதியம் தான் முக்கியம் எனக் கூறி, அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், உங்கள் வீட்டை அதன் அருகில் கட்டிக் கொள்ளுங்கள். இது நடக்காது, நடக்காது, நடக்காது. நான் உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், “வட சென்னைக்கு உட்பட்ட எண்ணூர் பகுதியில் 660 மெகா திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், மீனவர்கள் பாதுகாக்கப்படவும் கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என வடசென்னை தவெக இளைஞர் அணித் தலைவர் எம்.எல்.பிரபு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. ஓசூரில் சோகம்!

இதனிடையே, தமிழ்நாடு மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உதவும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.