தமிழகம்

அன்ணனாகவும்.. அரணாகவும்.. திடீரென விஜய் கைப்பட கடிதம் எழுத காரணம் என்ன?

ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் பயனில்லை என்பது தெரிந்ததே என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில், “கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அடுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தரிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

அதேநேரம், இக்கடிதம் விஜய் கைப்பட எழுதியுள்ளதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்கலை அருகில் பிரியாணி கடை நடத்தி வரும், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதையும் படிங்க: தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதற்கு முன்னதாகவே, ஆளும் திமுக அரசைக் கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

4 hours ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

5 hours ago

தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…

5 hours ago

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…

6 hours ago

என் மானமே போச்சு.. தனிக்குடித்தனம் போன ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்!

நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…

6 hours ago

என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!

பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…

6 hours ago

This website uses cookies.