ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
சென்னை: போராட்டக் குழுவினரைச் சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து, நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளார் புஸ்ஸி என்.ஆனந்த், நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில், ஜனவரி 19 அல்லது 20-ல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு, மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்வதற்கு, காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 20ஆம் தேதி, ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, விக்கிரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரைச் சுற்றி 5 ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. எனவே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் கண்முன்னே இளைஞர் வெட்டிக்கொலை…? காவல்நிலையம் கண்ணாடி உடைப்பு!!!
அதேநேரம், சமீபத்தில் சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை, சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினார் விஜய். இதற்கு, களத்திற்குச் செல்லாத விஜய் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், முதல் முறையாக களத்தில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.