சென்னை தண்டையார்பேட்டையில் கொடி வைக்கச் சென்ற தவெகவினர், திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நட்டு வைப்பதற்கு, தவெகவைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அதற்கான பெயர்ப் பலகையை அவர்கள் அங்கு வைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென போலீசார் வந்ததால் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து, இங்கு அனுமதி இன்று கொடி, பெயர்ப்பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது என போலீசார் கூறி உள்ளனர். அது மட்டுமல்லாது, அங்கு வந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளும், அனுமதி இல்லாமல் இவ்வாறு கட்சி பேனர், கொடி, பெயர்ப்பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது எனக் கூறி உள்ளனர்.
பின்னர், அவர்கள் என்ன நினைத்தார்களோ, திடீரென பெயர்ப்பலகை எல்லாவற்றையும் தவெகவினரே அகற்றி கொண்டு சென்றனர். பின்னர் அடுத்த சில நிமிடங்களில், தவெக கொடி, பெயர்ப்பலகை வைக்க வந்த நபர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தார்.
இதையும் படிங்க: VPN மூலம் மிகப்பெரிய நெட்வொர்க்.. பாங்காங்கில் இருந்து போதைப்பொருள் வந்தது எப்படி? மேலும் இருவர் கைது!
அதில், எதைச் செய்தாலும் சட்டப்பூர்வமாக, அதற்கான முறையான அனுமதியோடு நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கொடி, பெயர்ப்பலகை வைக்கச் சென்ற தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவர்கள் திமுகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.