Categories: தமிழகம்

மூதாட்டி கொலை வழக்கில் ட்விஸ்ட்… கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது : விசாரணையில் பகீர்!!

மூதாட்டி கொலை வழக்கில் ட்விஸ்ட்… கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது : விசாரணையில் ஷாக்!!

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். டிரைவராக வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி வருவதுடன் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 17.5.2023 அன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் பொருட்கள் சிதறி கிடந்தது.

இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் ராஜேஸ்வரியின் சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொலை சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மணிகண்டன் தொட்டியதிற்கு விரைந்து வந்தார். தாய் கொலை செய்யப்பட்டது குறித்தும் வீட்டில் இருந்த 63சவரன் நகைகள், 10லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்தும் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி போலீஸ் எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மேற்பார்வையில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி முதல் நிலை காவலர் விஜயராகவன் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தொட்டியம் வள்ளுவர் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் கிருஷ்ணன் என்கின்ற பில்லா (20), மணமேடு நடு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் ஆறுமுகம் என்கின்ற நாட்டாமை (20), தொட்டியம் அழகரை மேற்கு அர்ஜுன தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ்(19), தொட்டியம் சித்தூர் தெற்கு தெரு ராஜாராமன் மகன் விக்ரம் (20) ஆகியோர் மூதாட்டியை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் மூதாட்டியை கொலை செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர்.

இதில் கிருஷ்ணன், ஆறுமுகம், மோகன்ராஜ் ஆகிய மூவரும் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஏ வரலாறு படித்து வருவதும், விக்ரம் தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் மேனேஜராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், 80கிராம் வெள்ளி பொருட்கள், ரூ48ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றும், 4 லட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இறந்து போன ராஜேஸ்வரி கல்லூரி மாணவர் கிருஷ்ணனின் சகோதரர் விஜயகுமார் மற்றும் அவரது தாயார் ஆனந்தி ஆகியோரை சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு திட்டியதாக கூறப்படுகிறது. அதனை மனதில் வைத்துக் கொண்டு கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் திட்டமிட்டு மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சியின் மொத்த வசூலை தூக்கி சாப்பிட்ட ‘டிராகன்’…பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ.!

டிராகன் vs விடாமுயற்சி இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘டிராகன்’ மாறியுள்ளது,உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கும் அதிகமான…

3 minutes ago

ஒரேயொரு வீடியோ கால்.. போன் போட்ட நண்பர்கள்.. சிக்கிய முக்கிய நபர்!

சென்னை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோ அழைப்பை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையின்…

4 minutes ago

பழனி – வேல் இருமொழிக் கொள்கை இதுதான்.. தொடரும் பிடிஆர் அண்ணாமலை மோதல்!

அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை:…

39 minutes ago

என்னது நாகரிகம் இல்லையா? தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் : அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

எங்களைப் பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று பேசுகிறீர்கள் நாக்கை அறுத்து விடுவான் டா தமிழன் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.…

55 minutes ago

இருப்பைக் காட்டிக் கொள்கிறாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலை குறித்து அன்றும், இன்றும் ட்விஸ்ட் பேச்சு!

லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.…

2 hours ago

இந்தியாவில் முதன்முறையாக விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகை.. விலையை கேட்டா தலையே சுத்திடும்!

சினிமாவில் பிரபலமாகும் நடிகர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த காரை பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் சினிமாவில் உள்ளவர்களக்கு சகஜம் தானே என்று நாம்…

2 hours ago

This website uses cookies.