புதுச்சேரியில் ட்விஸ்ட்… பாஜகவில் இணைந்த முன்னாள் காவல்துறை ஐஜி… தேர்தல் களத்தில் பரபரப்பு!
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி.சந்திரன் இன்று பாஜகவில் இணைந்தது புதுச்சேரி அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது
மக்களவை பொதுத்தேர்தலுக்காக அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தைதொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடஙகியது. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் போட்டியிடவுள்ளார். வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. ஓரிரு நாளில் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான சந்திரன் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சந்திரன் கடந்த 34 ஆண்டுகளாக புதுச்சேரியில் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி மற்றும் ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையில் உயரதிகாரியாக பணியாற்றியவர் மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளராகவும் பல மாநிலஙகளில் பணியாற்றியுள்ளர்.
பாஜக மக்களவை தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி சந்திரனை கட்சியில் சேர்த்தது புதுச்சேரி தேர்தல் களம் பரபரப்படைந்து வருகின்றது.
மேலும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் ஒரு தரப்பு தெரிவித்து வருகிறது
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.