Categories: தமிழகம்

குளிர்பானத்தில் மது கலந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் திருப்பம் : சிக்கிய குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்!

திருச்சி அருகே சிறுமியை 5 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்து 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவை சேர்ந்த 16வயதுடைய சிறுமியை முசிறி அந்தரபட்டியை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரெங்கநாதன் (வயது 21) தனது இருசக்கர வாகனத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ரெங்கநாதன் சிறுகாம்பூர் அருகே செங்கொடி குடித்தெருவை மணி (எ) மணிகண்டன் உட்பட 4 நண்பர்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் 5பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர்.

பின்னர் வாலிபர்கள் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சித்திரை மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை கண்ட அவரது பெற்றோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வாட்ஸப் வைரலாக பரவியது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

இதையடுத்து காப்பகத்தில் இருந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளிர் காவல்துறையினர் சிறுமி விசாரணைக்கு அழைத்து வந்து நடந்த விபரங்களை கேட்டு புகார் மனு பெறப்பட்டது.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து முசிறி
அந்தரபட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மற்றும் சிறுகாம்பூரைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேலும் இருவர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை தேடி வரும் நிலையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரை காவல்துறையினர் தேடி வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.