தமிழகம்

பார்ட்டியில் ஏறிய போதை.. தெளிந்ததும் தெரிந்த அவலம்.. அரசுப் பேருந்து ஓட்டுநர் சிக்கியது எப்படி?

நெல்லையில், இளம்பெண்ணை போதையில் ஆழ்த்தி நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). இவருக்கு திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுபாஷ், ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் சுபாஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பெண், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் பங்கேற்பதை அப்பெண் வழக்கமாக வைத்துள்ளதால், இதற்காக ரயிலில் வந்து செல்லும்போது சுபாஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், இருவரும் தங்களது செல்போன் எண்ணைப் பகிர்ந்து கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சுபாஷ், தனது குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு அழைத்துள்ளார்.

இதன்படி நெல்லை வந்த அந்தப் பெண்ணுடன், தனியார் பாரில் மது குடித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போதை தலைக்கேறியதால், சுபாஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அவரது நண்பரான அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசன் (37) என்பவரையும் அழைத்து அந்தப் பெண்ணுடன் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: புகாரளிக்கச் சென்ற பெண்.. எஸ்ஐ சொன்ன ‘அந்த’ வார்த்தை.. மதுரையில் நடந்தது என்ன?

இதனையடுத்து, போதை தெளிந்த அப்பெண், தனக்கு நேர்ந்ததை சுதாகரித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி, உறவினர்கள் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால் சம்பவ இடத்தை அவரால் சரியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

இருப்பினும், வழியில் இருந்த ஒரு போர்டில் இடம் பெற்றிருந்த பெயரை போலீசில் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணைக்குப் பிறகு சுபாஷ் மற்றும் அவரது நண்பர் முருகேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

4 minutes ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

1 hour ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

1 hour ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

2 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

3 hours ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

3 hours ago

This website uses cookies.