சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை மாவட்டம், கொளத்தூர் அடுத்த சம்தரியா காலனியைச் சேர்ந்தவர்கள் பாலாஜி – ஜமுனா (28) தம்பதி. இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு வண்டலூரைச் சேர்ந்த ஹரிஷ் (29) என்பவர் ஜமுனாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்த பழக்கத்தின் மூலம் ஒருநாள், ஜமுனா மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்ட ஹரிஷ், தனது நண்பரான சூளைமேட்டைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர், துரைப்பாக்கம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். எனக் கூறியுள்ளார்.
எனவே, அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், தங்களிடம் பணம் எதுவும் இல்லை என ஐடி தம்பதி கூறியுள்ளனர். ஆனால், ஹரிஷ் அவரது நண்பர் சதீஷ் மூலம் வங்கியில் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், மாதத் தவணைகளை நிறுவனத்திலிருந்து செலுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு ஜமுனா ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரது பெயரில் பல வங்கிகளில் 65 லட்சத்து 56 ஆயிரத்துக்கு கடன் பெற்று, நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பேசிய படி மாதத் தவணைகளை சரியாகச் செலுத்தாமல், சதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். ஒருமுறை, இது குறித்து கேட்ட ஜமுனாவிற்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசாரின் முக்கிய நகர்வின் பின்னணி!
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா, இது தொடர்பாக ஒட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.