சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். எனவே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, மேலும் விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர் குமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன்படி, மணிவண்ணன் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அப்போது, 900 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவரிடமும் சேர்ந்து 2.700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் சந்தை மதிப்பு 27 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னைவாசிகளே.. பட்டாசு வெடிக்க என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.