தமிழகம்

இலங்கைக்கு கடத்தப்படும் மெத்தபெட்டமைன்.. சென்னையில் இருவர் சிக்கியது எப்படி?

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். எனவே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, மேலும் விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர் குமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன்படி, மணிவண்ணன் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

அப்போது, 900 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவரிடமும் சேர்ந்து 2.700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் சந்தை மதிப்பு 27 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : சென்னைவாசிகளே.. பட்டாசு வெடிக்க என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Hariharasudhan R

Recent Posts

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

12 minutes ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 hours ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

2 hours ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

3 hours ago

சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

3 hours ago

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… காரில் ஏறி புறப்பட்ட முன்னாள் அமைச்சர்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…

3 hours ago

This website uses cookies.