கோவை: வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த செலக்கரிசல் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞர்களுக்கு புதர்களில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான சுல்தான்பேட்டை போலீசார், செலக்கரிசல் குளம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார், அவரை சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சிபாராம் மஹாராணா தனது கூட்டாளியான சுதர்சன் புஹான் என்பருடன் இணைந்து வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும், செலக்கரிச்சல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புதர்களில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 70 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.