கன்னியாகுமரி அருகே கடனை திரும்ப கேட்டவரை அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். அரசு பேருந்து ஓட்டுனரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தேவதாஸ் நேற்று மாலை தனது வீட்டின் முன் மீன் வலைகளை பின்னி கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்த சசிக்குமார் தேவதாஸ்-ஐ தகாத வார்த்தைகள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதை கண்ட தேவதாஸ் மனைவி தடுக்க வந்த நிலையில், இரு தரப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கட்டிப்புரண்டு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார், தேவதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தில் வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் மற்றும் தேவதாஸ் குடும்பத்தினர் கட்டிப்புரண்டு தாக்கி கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.