Categories: தமிழகம்

இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு!

இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு!

விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பிரதமர் மோடி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் பஞ்சாப் எல்லையில் டெல்லியை நோக்கி அறவழிப் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக எழுவதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயிலை மறிக்க முயற்சி செய்தனர்.

அப்போது நின்று கொண்டிருந்த ரயிலை நோக்கிச் சென்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே இவர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற போது மற்றொரு சங்கமான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் திடீரென அவர்களும் ரயில் நிலையத்திற்குள் வர முற்பட்டனர்.

அப்பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டனர் ஆனால் அப்பொழுது வந்தே பாரத் ரயில் வரவே அந்த ரயிலை நிறுத்த விவசாயிகள் முயன்றனர்.

அப்பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதற்குள்ளாக வந்தே பாரத் ரயில் செல்லும் வரை விவசாயிகள் நிறுத்தப்பட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் முன்பு சென்றவாறு ரயில் முன்பாக அமர முயற்சி செய்தனர் அப்பொழுது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை தள்ளி அழைத்து வந்து கைது செய்தனர்.

இந்த இரண்டு விவசாய சங்கங்களும் ஒரே நேரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

7 minutes ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

11 minutes ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

1 hour ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

3 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

3 hours ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

3 hours ago

This website uses cookies.