பழவேற்காட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் பிடித்து விட்டு முகத்துவாரம் பகுதியில் வரும்போது படகு கவிழ்ந்து கடல் அலை சீற்றம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வைரவன் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன் மற்றும் அரங்கம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் அப்பு ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் இரண்டு நாட்களாக மீன்பிடித்து விட்டு மூன்றாவது நாளான இன்று கரையை நோக்கி வரும்போது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து உள்ளது.
இதையும் படியுங்க: சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு… இளைஞருக்கு அறிவித்த தண்டனை!!
இதில் படகில் இருந்த செல்வம் மோகன் ஆகியோர் மாயமான நிலையில் தட்சிணாமூர்த்தி,மணிபாலன் அப்பு ஆகியோர் தப்பித்து கரை சேர்ந்தனர்.
தகவல் அறிந்து கிராம மக்கள் படகுகள் மூலம் அங்கு சென்று கவிழ்ந்த படகினையும் மீன்பிடி உபகரணங்களையும் கரை சேர்த்தனர்.
மேலும் காணாமல் போன இருவரையும் கடலில் தேடி வருகின்றனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு படகுகள் மூலம் விரைந்து சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.