தமிழகம்

எப்போதும் ஒன்றாக இருக்கும் நெருங்கிய தோழிகள் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூரில் எப்போதும், எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் தோழிகள் ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மருதாச்சல மூர்த்தி. இவருக்கு அவந்திகா(19) என்ற மகள் இருந்தார். இந்த அவந்திகாவும், ரமேஷ் என்பவரது மகள் மோனிகாவும் (19) நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

மேலும் தோழிகள் இருவரும் பகுதி நேரமாக பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (டிச.11) மாலை அவந்திகா வீட்டிற்கு மோனிகா சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது, அங்கு உள்ள ஒரு அறையில் அவந்திகாவும், மோனிகாவும் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தோழிகளின் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோனிகாவும் அவந்திகாவும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்களாம். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்களாம். ஆனால் இருவரின் பெற்றோர், ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்க மாட்டார்கள் என்றும், எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் இரண்டு பேரும் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: எந்தவொரு செயலுக்கும் தற்கொலை தீர்வல்ல. அவ்வாறு தற்கொலை தொடர்பான எண்ணங்கள் தோன்றினால் உடனடியாக மனநல ஆலோசனையை பரிந்துரைக்கப்பட்ட உளவியல் மருத்துவர்களிடம் பெறவும்.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.