திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து 81லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று இரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட
பயணிகளுடன் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இரு பயணிகளை தனியாக அழைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி தன்னுடைய உடைமையில் சுமார் 983.50கிராம் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு சுமார் 48 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாகும், இதோ போல் மற்றொரு பயணியை சோதனை செய்த போது, அந்த நபர் பசை வடிவில் 668.600 கிராம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாயாகும். இரு பயணிகளிடமும் இப்படிப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 81லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.