தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் மொரப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் ஒருவர் நூதன முறையில் உடை அணிந்திருந்தார்.
மொரப்பூர் ஒன்றியம் M.வேட்ரப்பட்டியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைகளாக மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து இரண்டு நபர்கள் சந்தைமேடு பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் கையில் பதாதைகளை ஏந்தி, காலி குடங்கள், மண் அடுப்பு, உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரை அப்புறப்படுத்தினர்.
நூதனமான முறையில் உடைகளை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.