புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக தொண்டர்கள் முண்டியடித்துச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு சூழல் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டத்தின் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ டாக்டர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, வழங்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி சாப்பிட முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி கீழே சிலர் தடுமாறி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் மயக்கம் அடைந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணிக்காக முந்தி அடித்துக் கொண்டு சென்ற போது தடுமாறி கீழே விழுந்து இரண்டு பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.