திருச்சி அருகே விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த சிட்டா ஆவணங்கள் சரி பார்ப்பதற்காக வேளாண் கூட்டுறவு சங்கத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவற்றை சரிபார்த்த கிராம நிர்வாக அலுவலர் வந்த சிட்டா மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் இது தொடர்பாக ஜீயபுரம் காவல் இடத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் கொடுத்த பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.