திருச்சி அருகே விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த சிட்டா ஆவணங்கள் சரி பார்ப்பதற்காக வேளாண் கூட்டுறவு சங்கத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவற்றை சரிபார்த்த கிராம நிர்வாக அலுவலர் வந்த சிட்டா மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் இது தொடர்பாக ஜீயபுரம் காவல் இடத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் கொடுத்த பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என் வீட்டில் ஊற்றிய மலம், தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம் என…
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்…
This website uses cookies.