செங்கம் அருகே குடும்ப தகராறில் மகன்களே தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன், சக்திவேலுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானிப்பாடி காவல் துறையினர் சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து மகன்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் உறுதுணையாக இருந்த மனைவி அன்னக்கிளி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக்காக மகன்களே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் தானிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.