தூத்துக்குடி அருகே, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அண்டாவில் கவிழ்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் – காஞ்சனாதேவி தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதில் சபீனா பானு என்ற மகள் இருந்தார். இந்த நிலையில், இக்குழந்தை அண்டாவில் நிரம்பியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக, அண்டா தண்ணீரில் குழந்தை தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையின் சத்தம் நீண்ட நேரமாக கேட்காமல் இருந்துள்ளது. எனவே, சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது, அண்டா தண்ணீரில் குழந்தை மூழ்கிக் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், அண்டாவில் கிடந்த குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர், குழந்தையை பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தயைக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பெற்றோரை சோகத்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.