திருச்சியில் நாக்கைப் பிளந்து தான் டாட்டூ போட்டது மட்டுமல்லாமல், பொதுவெளியில் இதற்கு விளம்பரம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இதனிடையே, இவர் மும்பைக்குச் சென்று தனது நாக்கை இரண்டாகப் பிளந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதில் டாட்டூவும் போட்டுள்ளார். அது மட்டுமல்லாது, இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது நண்பரான ஜெயராமையும் அழைத்து வந்து, இதேபோல் நாக்கைப் பிளந்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த இவர்கள், இதுபோன்ற வித்தியாசமான டாட்டூகளுக்கு தங்களை தொடர்பு கொள்ளுமாறும் விளம்பரம் செய்து உள்ளனர்.
ஆனால், இது போன்ற விபரீதமான செயல்கள் சட்டத்திற்கு புறம்பானது என பலரும் இதற்கு எதிர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், ஏலியன் எமோ ஸ்டூடியோ என்ற பெயரில், சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக ஹரிஹரன் மற்றும் ஜெயராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் மும்பைக்குச் சென்று உள்ளார். அங்கு தனது கண்களை நீல நிறமாக மாற்றி உள்ளார். மேலும் இதற்காக 7 லட்சம் ரூபாயை அவர் செலவு செய்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இதற்கு பாடி மாடிஃபிகேஷன் என்றும் அவர்கள் பெயர் வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடியினரை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. வயநாட்டில் என்ன நடந்தது?
மேலும், இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என்றும், இத்தகையச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அறிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.