திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிக மனு கொடுப்பதற்கு காரணம் என்ன என்று..? என்பது குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் காந்தி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 200 கழக முன்னோடிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார். மேலும், நலத்திட்ட உதவிகள் 10 ஆட்டோக்கள், மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, தையல் இயந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள் என பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிகமான மனுக்களை கொடுக்கின்றனர். மனுக்களை கொடுத்தால் தங்கள் பிரச்சனைகள் தீரும் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்புகின்றனர். அதனால் மனுக்களை அதிகமாக கொடுக்கின்றனர். அத்தகைய சிறந்த ஆட்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக தலைவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நான் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரை நேரில் கண்டதில்லை. ஆனால் கழக முன்னோடிகளை நான் தந்தை பெரியார் ஆகவும், அறிஞர் அண்ணாவாகவும், முத்தமிழ் அறிஞர் கலைஞராகவும் பார்க்கிறேன் என அவர் பேசினார். இவ்விழாவில் ஏராளமான திமுக தொண்டர்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.