தேசிய தேர்வு முகமை (NTA) யுஜிசி நெட் தேர்வுகளை கலை மற்றும் அறிவியல் உள்பட 85 பாடங்களுக்கு ஆண்டு இருமுறை நடத்துகிறது. இத்தேர்வு கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கைக்கான தகுதி தேர்வாகும். டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் டிசம்பர் 11 வரை பெறப்பட்டன.
இதையும் படியுங்க: பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு… 2 குழந்தைகளுடன் தவித்த வெளிநாட்டு பயணி!
தேர்வுகள் ஜனவரி 3 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதில், மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15) மற்றும் காணும் பொங்கல் (ஜனவரி 16) ஆகிய நாட்களில் பல பாடங்களுக்கான தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த முடிவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. தேர்வு தேதிகளை மாற்ற கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஜனவரி 15-ம் தேதிக்கான யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.