திண்டுக்கல்லில் பூப்புனித நீராட்டு விழாவில் முந்தைய காலங்களில் தமிழகத்தின் பழமை மாறாமல் 12 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு வியந்து ரசித்தனர்.
திண்டுக்கல் முருக பவனத்தைச் சேர்ந்த ஜெயபால் டீக்கடை தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ரம்யாவின் பூப்புனித நீராட்டு விழா, அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஜெயபால் மனைவியின் உடன் பிறந்த சகோதரர்கள் பழனி ரோட்டில் உள்ள லாரி செட் அருகில் இருந்து தாய்மாமன் சீராக 12 மாட்டு வண்டிகளில் பழைய முறை மாறாமலும் தாம்பாள தட்டில் கருப்பட்டி, பழங்கள், பூக்கள், பட்டு புடவைகள், வண்ண சுவை உடைய இனிப்பு வகை பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள், இதற்கு மேலாக தாய்மாமன் சீராக ஆடுகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருள்களை மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலம் ஆக வான வேடிக்கையுடன் தமிழக பாரம்பரியம் மாறாமல் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த பழமையான தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை சாலையில் சென்ற அனைத்து பொதுமக்களும் வியந்து பார்த்து ஆசிரியத்தோடு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.