ராமநாதபுரம் அருகே கீழக்கரை டீ கடைக்குள் புகுந்த சொகுசு கார் மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் நாராயணன் சாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் மது போதையில் இருந்த ஒருவர் காரை இயக்கியதாகவும், கட்டுபாட்டை இழந்து கார் டீக்கடைக்குள் அதிவேகமாக உள்ளே சென்று மோதியதில், தெற்கு வேளானுர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி என்ற 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கீழக்கரை லட்சுமிபுரத்தை சார்ந்த கோவிந்தன் என்பவர் சேலத்தில் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருடைய தம்பி மகளின் காது குத்துக்காக கீழக்கரை வந்துள்ளார். ஊருக்கு செல்லும் பொழுது புதிய பேருந்து நிலையம் அருகில் நிறுத்திவிட்டு வெளியே சென்றதாகவும், அவரோடு பயணித்த நபர் காரை ஓட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை காவல்நிலைய காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், டீக்கடைக்குள் புகுந்த காரை ஜேசிபி உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. இறந்தவர் உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.