திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6 1/2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நெடு வரம் பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (70). இவரது மனைவி மகேஸ்வரி (68). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். விஜயன் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, திறந்திருந்த வீட்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து மகேஸ்வரி கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி பீரோவில் இருந்த நகைகளை எடுக்கச் சொல்லியுள்ளனர்.
இதைப் பார்த்த கணவர் விஜயனை மூன்று நபர்கள் தலையில் கட்டையால் தாக்கி விட்டு, தாலி சரடு, இரண்டு நெக்லஸ் உள்ளிட்ட 6/12 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பீரோவில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்தசோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட விஜயனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கூலி தொழிலாளியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
This website uses cookies.