வரலாறு காணாத மழை… 4 மாவட்டங்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உருக்குலைத்து போட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இன்று பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரில் மட்டும் 21 இடங்களில் அதீத கனமழையும் 59 இடங்களில் மிக கனமழையையும் 15 இடங்களில் கனமழையையும் கொட்டித் தீர்த்தது மிக்ஜாம் புயல். சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவரக் கூடாது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அதிகாரிகள் வரை தொடர் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.
சென்னையில் பாதிப்பு நிலவரம் மிகவும் கவலைக்குரியதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், அலுவலகங்களுக்கும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.