கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் புலம்பியபடி மக்கள் குடையுடன் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் படிக்க: 10 பேருனா கிண்டல் பண்றீங்க… நீங்க சொல்லுங்க எத்தனை பேருனு… நாங்க சாப்பாடு போடுறோம் ; செல்வப்பெருந்தகை ரிவேஞ்ச்!!
பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர். அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகள் இடையே வியப்படையச் செய்தது. அதே போன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபி செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றவாறு பயணம் செய்தனர்.
மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததன் காரணமாக மழை நீர் வழிந்ததை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பயணம் செய்தனர். மழைக் காலங்களில் இவ்வாறு அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் கடும் அவதிக்கு உள்ளாவதாக சக பயணிகள் கடிந்து கொண்டனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.