தூத்துக்குடி ; தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நகர் முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
மழைகாலங்களில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியும் ஒன்று. இந்தத் பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கால்வாய்களை மூடும் பொழுது கம்பிகள் ஏதும் இல்லாமல் கான்கிரீட் போடப்படுவதாகவும், கால்வாய்க்கு மேல் மூடி போடாமல் பணிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு கம்பிகளில்லாமல் போடும் பொழுது, அது உடனடியாக உடைந்து விடுவதுடன், பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இதை போல் நகரின் பல பகுதிகளிலும் இதுபோன்ற தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.