தமிழகம்

உசிலம்பட்டி அருகே அரங்கேறிய ‘அசுரன்’ சம்பவம்.. தீண்டாமை கொடுமையின் உச்சம்.. நடந்தது என்ன?

மதுரை, உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனுக்கு நடந்த தீண்டாமை கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரை, கடந்த ஜனவரி 16ஆம் தேதி கிராமத்தின் அருகில் உள்ள கண்மாய்க்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். குறிப்பாக, அவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், அழைத்துச் சென்ற ஆறு பேரும் தங்களது காலில் அச்சிறுவனை விழ வைத்துள்ளனர். மேலும், அந்த கண்மாய் அருகில் இருந்த பலரது காலிலும் அவர்கள் விழ வைத்துள்ளனர்.

அதில், ஆறு வயது சிறுவன் காலிலும் 17 வயது சிறுவன் விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து அச்சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ், சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் மற்றும் மணிமுத்து ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ஆறு பேரையும் உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, பட்டியலின சிறுவன் மீது அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை சம்பவம் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

12 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

13 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

14 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

14 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

14 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

14 hours ago

This website uses cookies.