தமிழகம்

காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்பொடி தூவி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது வீட்டின் காலின் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது. எனவே, பிரியங்கா கதவைத் திறந்து யார் என்று பார்த்து உள்ளார்.

இவ்வாறு பிரியங்கா வந்த அடுத்த நொடியே, காலிங் பெல் அடித்த நபர் அவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளார். தொடர்ந்து, பிரியங்க கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்த அந்நபர், அங்கு இருந்து உடனடியாக தப்பிச் சென்று உள்ளார்.

பின்னர், இது குறித்து போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில், பிரியங்காவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் என்பதும், அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம்லால் என்பதும் தெரிய வந்து உள்ளது.

மேலும், அவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதையும் அறிந்த போலீசார், அவரைப் பிடிப்பதற்கு உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது, அங்கு அவரைத் தேடிப் பிடித்த போலீசார், கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையும் படிங்க: நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு.. திடீரென நுழைந்த அதிகாரிகள் : கட்டு கட்டாக பணம்? திரையுலகம் ஷாக்!

இந்த விசாரணையில், தனது மனைவி தங்கச் செயின் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக ராம்லால் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், செயின் பறிப்பு குறித்து புகார் அளித்த 6 மணி நேரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.