திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மழை வெள்ளத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பெரியசாமி கண்முன்னே வைகை ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தொடர் மழை காரணமாக காற்றாற்று வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் தொடர்ச்சியாக வத்தலகுண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி வைகை ஆறு கரையோர பகுதிகளை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். வைகை ஆற்றின் பாலத்தின் மீது நின்று அவர் தண்ணீர் வரத்து குறித்து பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தது.
கண்முன்னே பசுமாடு ஆற்றில் விழுந்து அடித்து வரப்படுவதைக் கண்டு பதறிய அமைச்சர் இ.பெரியசாமி உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் ஆற்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் கிராம மக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் இ.பெரியசாமி வைகை ஆறு கரையோரம் விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.