மதுரை ஆரப்பாளையம் வைகையாற்றை ஒட்டியுள்ள தரைப்பாலம் முழுவதிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மாநகரில் நேற்று இரவு தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த பரவலான மழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள தரைப்பாலத்தில் முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், சிம்மக்கல், கோரிப்பாளையம் முதல் விரகனூர் வரை செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி செல்கின்றது.
மேலும், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி செல்லும்போது, சேறும் சகதியுமாக உள்ள தண்ணீர் பணிகளுக்கு செல்லக்கூடியவர்களின் ஆடைகள் மீது படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கால்களை வாகனத்தின் மேல் வைத்தபடி பக்க இயக்கும்போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
மதுரை பைபாஸ் சாலை முதல் ஆரப்பாளையம் பகுதியில் இருந்து வைகை ஆற்று கரையோரத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய தரைப்பால பகுதி முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், வைகை ஆற்றில் அந்த பகுதி முழுவதிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ள நிலையில் ஆற்றில் உள்ள நீரும் செல்ல முடியாத நிலையில் தரைப்பாலத்தில் செல்வதால் தொடர்ந்து நீரின் அளவும் அதிகரித்துவருகிறது
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.