வேலூர்: இந்தி தேசிய மொழி என்ற கருத்தை இனி யாரும் பேசாதீர்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி VIT பல்கலைகழகத்தில் இன்று தமிழியக்கம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132-வது பிறந்த நாள் விழா இனிதே நடைபெற்றது.
சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்க்கு தமிழியக்கத்தின் பொருளாளர் “பதுமனார்”, பொதுச் செயலாளர் அப்துல்காதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்க்கு VIT வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். கவிஞர் வைரமுத்து சிறப்புரை வழங்கி பேசும் பொழுது பாரதிதாசன் கருத்துப்படி வேந்தர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, கல்வியை மேம்படுத்தி வருகிறார்.
இன்று 36,000 மாணவர்கள் ஒரு குடையின் கீழ் இருந்து 54 நாட்டிலிருந்து மாணவர்கள் இங்கு கல்வி வெளிச்சம் பெற்று வருகின்றனர். மக்கள் அனைவரும் சாதிக்கு பெருமிதம் கொள்ளாமல், தமிழன் என்று பெருமிதம் கொள்வோம் என்று உறுதிமொழி எடுங்கள்.
வடநாட்டு கலைஞர்கள் இந்தி தான் தேசிய மொழி என்று கூறுகிறார்கள். இந்தியா பல மொழிகள் பேசபடுகின்ற நாடு, எனவே இந்தி தேசிய மொழி என்ற கருத்தை இனி யாரும் சொல்லாதீர்கள் என்று கூறிய அவர் தமிழர்கள் அனைவரும் தமது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். அது நாம் பாரதிதாசனுக்கு செலுத்தும் நன்றி ஆகும் என்று கூறினார்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.