கோவை : வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை பகுதியில் அரசு பள்ளியில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குலசேகரன் (50). இவர் வால்பாறை பகுதி காடம்பாறையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தற்காலிக ஊழியராக 29 வயது பெண் வேலை பணி செய்து வந்துள்ளார்.
இந்த பெண் ஊழியரிடம் தலைமை ஆசிரியர் குலசேகரன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்து, காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காடம்பாறை காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் குலசேகரனை விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.