பெண்ணை விரட்டி விரட்டி தாக்கும் VAO உதவியாளர்… அரசு ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா? ஷாக் சிசிடிவி காட்சி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல்.
இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று கிராம உதவியாளராக பணியமர்ந்து ஓராண்டு காலமே ஆகியுள்ள நிலையில். இவர் மீது மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆகியோரிடம் பல புகார்கள் வழங்கப்பட்ட நிலையில் இவர் தாலுகா அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண்ணை விரட்டித் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் இவரது செல்போன் ஸ்டேட்டஸில் கத்தியுடன் இவர் நிற்கும் புகைப்படத்தினை பதிவேற்றியதை whatsapp மூலமும் பரப்பி வருகின்றனர்.
இது கோவில்பட்டி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இவர் whatsapp ஆடியோவில் தரக்குறைவான முறையில் பேசியதும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஒரு அரசு ஊழியராக பணியாற்றி கொண்டு ஆட்களை மிரட்டும் வகையில் சூரிக் கத்தியுடன் போஸ் கொடுப்பதும் பெண்கள் என பாராமல் நடுரோட்டில் அடிக்க பாய்வதும் உடன் பணியாற்றுபவர்களை மிரட்டுவது போல் இழிவான வார்த்தையில் வசைபாடுவது என இவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் இவர் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.