பெண்ணை விரட்டி விரட்டி தாக்கும் VAO உதவியாளர்… அரசு ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா? ஷாக் சிசிடிவி காட்சி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல்.
இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று கிராம உதவியாளராக பணியமர்ந்து ஓராண்டு காலமே ஆகியுள்ள நிலையில். இவர் மீது மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆகியோரிடம் பல புகார்கள் வழங்கப்பட்ட நிலையில் இவர் தாலுகா அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண்ணை விரட்டித் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் இவரது செல்போன் ஸ்டேட்டஸில் கத்தியுடன் இவர் நிற்கும் புகைப்படத்தினை பதிவேற்றியதை whatsapp மூலமும் பரப்பி வருகின்றனர்.
இது கோவில்பட்டி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இவர் whatsapp ஆடியோவில் தரக்குறைவான முறையில் பேசியதும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஒரு அரசு ஊழியராக பணியாற்றி கொண்டு ஆட்களை மிரட்டும் வகையில் சூரிக் கத்தியுடன் போஸ் கொடுப்பதும் பெண்கள் என பாராமல் நடுரோட்டில் அடிக்க பாய்வதும் உடன் பணியாற்றுபவர்களை மிரட்டுவது போல் இழிவான வார்த்தையில் வசைபாடுவது என இவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் இவர் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.