உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், வட்டாச்சியரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன். இவர் பட்டா மாறுதலுக்கான வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு, நான் வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் பணியையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பம் இட வலியுறுத்தி சீமானுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நவநீதன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தொலைபேசியில் பேசிய நிலையில், அவரிடம் விஏஓ -வை கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.