தமிழகம்

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: 27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

2021ல் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பெரும் தோல்வி கண்டது,குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது,அந்தப் போட்டியில் பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை,இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்,இந்த சூழலில் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அவர்,”அந்த நேரம் எனக்கு மிகவும் கடினமானது,உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி இருந்தாலும்,என்னால் சரியாக விளையாட முடியவில்லை,விக்கெட்டுகள் எடுக்க முடியாததால் மன அழுத்தம் ஏற்பட்டது.

இந்தியா தோல்வி அடைந்த பிறகு சிலர் மிரட்டல் அழைப்புகள் கொடுத்தனர்,என்னை பலரும் இந்தியா வரக்கூடாது என கோஷங்களை எழுப்பினார்கள்,விமானநிலையத்தில் இருந்து காரில் வீடிற்கு வரும் போது சிலர் என்னை பின்தொடர்ந்து வந்தார்கள்,சிலர் நேரடியாக என் வீட்டிற்கு வந்தார்கள்,அவர்களை தவிர்க்க சில நேரங்களில் ஒளிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.ஆனால் இப்போது கிடைக்கும் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைகிறேன்,”என்று கூறினார்.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க,கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடி தனது பயிற்சி முறையையும், தினசரி பழக்கவழக்கங்களையும் மாற்றி,அதிக உழைப்புடன் அணிக்கு திரும்ப வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Mariselvan

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

4 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

6 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

7 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

7 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

8 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

9 hours ago

This website uses cookies.