Categories: தமிழகம்

அமைச்சர் பொன்முடிக்கு முட்டுக் கொடுக்க விசிக எம்எல்ஏ அப்படி சொல்லியிருக்கிறார் : சிவி சண்முகம் விமர்சனம்!!

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளசாராயம் மற்றும் போலி மதுபானம் ஆறாக ஓடுகிறது. சமீபத்தில் கூட விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டில் நேற்று டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திய கோயில் பூசாரி மற்றும் அவரது நண்பர், 16 வயது சிறுவன் ஆகியோர் ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காகு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூசாரி உயிரிழந்ததாக, இன்று செய்தி வெளிவந்துள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் மதுபானத்தில் பெயிண்டை கலந்து அவர்கள் குடித்து இருப்பார்கள் என்று காவல்துறை சொல்லுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானம் அருந்தி ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையும், தமிழக அரசும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். மரக்காணம் போன்று ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

மேலும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்துக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபட சென்றால் அங்கு சாதி கலவரம் வெடிக்கும் என்று நான் கூறியதாக, இரண்டு நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சிந்தனைச்செல்வன் எனது பேட்டியை முழுமையாகப் பார்த்தாரா, இல்லையா என்பது தெரியவில்லை. பார்த்து இருந்தால் இப்படி அவர் சொல்லி இருக்க மாட்டார். யாரோ சொன்னதை வைத்து, இப்படி அவர் சொன்னாரா என்பது தெரியவில்லை.

உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, முட்டுக் கொடுப்பதற்காக, நான் சொல்லாததை சொன்னதாக சிந்தனைச்செல்வன் கூறியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்பான கலவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று உளவுப்பிரிவு தெரிவித்தது. இது, அப்போது செய்தியாகவும் வெளிவந்தது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அப்போது போராடியது. ஆனால், அதன் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தவறுகளை மூடி மறைப்பதற்காக, அரசு செயல்படுகிறது,

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதுபோல, கோயிலும் அனைவருக்கும் சொந்தம். எல்லோரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற சி.வி.சண்முகம், ஜப்பான் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானிலிருந்து வந்த களைப்பில் இருக்கிறார்.

களைப்பு முடிந்து ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து பகுதியை பார்வையிட செல்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கிண்டல் அடித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

8 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.