அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினர், தடுத்து நிறுத்திய விசிகவினரால் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை அப்பகுதி விசிகவினர் தடுத்து நிறுத்தி சிலையை பூட்டிவிட்டு பா.ஜ.கவினரை திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.
இதனால் இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.
காந்தி நகர் பகுதியை சேர்ந்த இருவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளதால் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளனர். இது பொது சிலை அல்ல நாங்கள் வைத்த சிலை என விசிக தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அம்பேத்கரின் வரலாறு பற்றி தெரியாமல் உள்ளனர் என பாஜகவினர் விசிகவினர் மாற்றி மாற்றி குறை சொல்லி விமர்சித்து வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிப்பதில் பாஜக – விசிகவினர் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.