அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினர், தடுத்து நிறுத்திய விசிகவினரால் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை அப்பகுதி விசிகவினர் தடுத்து நிறுத்தி சிலையை பூட்டிவிட்டு பா.ஜ.கவினரை திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.
இதனால் இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.
காந்தி நகர் பகுதியை சேர்ந்த இருவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளதால் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளனர். இது பொது சிலை அல்ல நாங்கள் வைத்த சிலை என விசிக தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அம்பேத்கரின் வரலாறு பற்றி தெரியாமல் உள்ளனர் என பாஜகவினர் விசிகவினர் மாற்றி மாற்றி குறை சொல்லி விமர்சித்து வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிப்பதில் பாஜக – விசிகவினர் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.