விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்து வரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் இளங்கோ ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓசூரில் உள்ள கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கோபிநாத் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாக அவரை வெற்றி பெற செய்ய தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வம் என்பவர் நாடாளுமன்ற தொகுதி திமுக மேலிட பொறுப்பாளர் இளங்கோவனிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, இளங்கோ, செல்வத்திடம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியே இல்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த செல்வம் இளங்கோவிடம் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க: காதலை ஏற்க மறுத்த காங்., நிர்வாகியின் மகள் கொடூரமாக குத்திக் கொலை… கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ
அப்போது அவர்களுக்குள் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேட்பாளரின் வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் திமுக தேர்தல் பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகின்றனர். எனவே கட்சி மேலிடம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் விசிக பொறுப்பாளர்களிடம் பேசி நாளை நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவை அறிவிப்போம், என தெரிவித்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.