Categories: தமிழகம்

வாய் தகராறில் காய்கறி வியாபாரி படுகொலை…!! தடுக்க சென்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு…! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச் செயல்…

சென்னை : சென்னையில் காய்கறி கடை வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வரும் கோபி என்பவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் காய்கறி கடை மற்றும் மலர் நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் பிளாட்பார கடை நடத்தி வரும் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆனந்த் மற்றும் அரவிந்த் அவர்களது 3 நண்பர்களுடன் சேர்ந்து கோபியை அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது தடுக்க முயன்ற கோபியின் மனைவி லதாவையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த லதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் தப்பியோடினார். இதையடுத்து படுகாயமடைந்த லதாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, குற்றவாளிகளான ஆனந்த், அரவிந்த் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

4 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

5 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

7 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

7 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

7 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

8 hours ago

This website uses cookies.