தருமபுரி : பாலக்கோடு அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வாகனம் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் பெட்டமுகிலாலம் மலை பகுதிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த தீபா(35), தங்கம்மாள்(55) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 10க்கும் மேற்ப்பட்டவர்களை அருகே இருந்த பொது மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன் மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களின் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் படுகாயமடைந்தவர்களை முதல் உதவி அளிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிக்கப் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சரவணன் பிடித்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.