கோவை : கோவை அருகே சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ம் தேதியன்று கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்பு உள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இரு சக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும்,
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற சரக்கு வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் மோதியதில் உயிரிழந்த இளைஞரின் உடலை சரக்கு வாகனம் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
This website uses cookies.